POLICY SERVICE

Showing posts with label licnanda. Show all posts
Showing posts with label licnanda. Show all posts

Sunday, December 26, 2010

பங்கு வர்த்தகம் (டிரேடிங் - Trading)

டிரேடிங் (Trading) என்றால் என்ன ?
டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது - விற்பது அல்லது விற்பது - வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.

பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where should I trade stocks?)
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். உலகளவில் (Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?
இல்லை. பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேராக செல்ல வேண்டியதில்லை. இவ்வர்த்தகம் செய்வதற்க்கென்றே பங்குச்சந்தையால் உரிமம் வழங்கப்பெற்ற பங்குத்தரகர்கள் (Stock Brokers) மூலமாக டிரேடிங் (Trading) செய்யலாம். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் (Investor) பங்குதரகரிடம் ஒரு கணக்கை (Account) தொடங்க வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (What is meant by Online Trading?)
ஆன்லைன் வர்த்தகம், சமீபகாலத்தில் புகழ்ப்பெற்ற வர்தக முறை ஆகும். இம்முறையால் வர்த்தகம் செய்வதற்க்கு, நீங்கள் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பங்குத்தரகரை அனுகாமல், நாம் இணையதளத்தின் (Internet) மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்க்கவோ முடியும்.
நாம் இணையதளத்தில் வர்த்தகம் செய்யும்பொழுது, ஆன்லைன் பங்குத்தர்கரை (Online Stock Broker) தொடர்பு கொள்வோம். ஆன்லைன் பங்குத்தகர் நம் சார்பாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வார். இதனால் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Brokerage fees) செலுத்த வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் என்ன ? (Advantages of Online Trading)
உதாரணத்திற்கு, நீங்கள்  வங்கியில் சேமிப்பு கணக்கு (Savings Account) வைத்துள்ளீர்கள் என்றும் எடுத்துக்கொள்வோம்.  ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு டிமேட் கணக்கு (Demat Account) ஒன்று தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, நீங்கள் வர்த்தகம் செய்வதற்கு தேவையான பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தின் முலம் பெறப்படும் தொகையை சேமிப்பு கணக்கிற்கும் மாற்றிக்கொள்ளலாம்.

டிமேட் கணக்கு (Demat Account) என்றால் என்ன ?
வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வது போல (As like savings account), இதற்கு என்றே இருக்கும் சில நிறுவனங்களிடம் நாம் கணக்கை தொடங்க வேண்டும். அவர்கள் நமக்கு, வங்கி கணக்கெண் போல புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Identity card with photograph) எண் கொடுத்துவிடுவார்கள்.

டிமேட் கணக்கின் பயன்பாடுகள் ? (Use of Demat account)
மேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ விற்கவோ முடியும். இக்கணக்கால்,
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.
  • விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)

சரி, டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (What you need to open demat account)
  • ஏதேனுமொரு அடையாள அட்டை (Identity card). உதாரணத்திற்கு வாக்காளர் அடையாள (Voters ID-card) அட்டை, ஓட்டுனர் உரிமம் (Driver License) போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை பயன்படுத்தலாம் (Ration card).
  • பாண் அட்டை. (PAN Card)

Saturday, December 25, 2010

கரன்சியிலும் கலக்கலாம் - 9

ஒரு அவுட்டோர் கேம் ஆடுவதில் எவ்வளவு சவால்கள் இருக்கிறதோ, அவை எல்லாமே கரன்சி மார்க்கெட்டிலும் இருக்கிறது. கரன்சி விளையாட்டில் உங்களுக்குப் பெரிய எதிராளி மார்க்கெட்தான்! எந்த ஒரு விளையாட்டிலும் அதிலிருக்கும் சவால்கள் அனைவருக்கும் சமமாக இருக்கும். அந்த சவாலை எதிர்கொண்டு தன்னுடைய தனித்திறமையால் வெற்றி பெறுபவர்கள் சேம்பியன்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், கரன்சி மார்க்கெட் எனும் கேமில் உள்ள சவால்கள் அந்த கேமை ஆடுபவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்காது! இந்த கேமில் மிகப்பெரிய சவால் எது தெரியுமா? ஒரு கரன்சியின் ஃபண்டமென்டல்கள் குறித்த மூலாதாரத் தகவல்கள்தான்.

ஸ்டாக் மார்க்கெட்டைப் பொறுத்தவரை ஒரு கம்பெனியைப் பற்றிய இன்ஃபர்மேஷன் அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டும். இது சட்டம். ஒரு கம்பெனியின் நடைமுறை குறித்த பெரும்பான்மையான தகவல்கள் (பி அண்ட் எல், பேலன்ஸ்ஷீட் மற்றும் பல பிரைஸ் சென்சிட்டிவ் இன்ஃபர்மேஷன்கள்) அனைத்தும் அத்தனை முதலீட்டாளர்களுக்கும் ஒரே நேரத்தில் சரியாக வந்து சேர்கிறதா என உறுதி செய்ய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும் செபியும் இருக்கின்றன. சிலர் இந்த விதிகளை மீறி ரகசியத் தகவல்களை வைத்துக்கொண்டு லாபம் பார்க்கும்போது, அவர்கள் மீது 'இன்சைடர் டிரேடிங்' ரெகுலேஷனின் கீழ் நடவடிக்கைகள் பாயும்.

ஆனால், கரன்சி மார்க்கெட்டில் ஒரு கரன்சியின் விலையைப் பாதிக்கும் பல விஷயங்கள் வியாபாரம் செய்யும் அனைவருக்கும் ஒரேசமயத்தில் தெரிந்து விடுவதில்லை. டிரேட் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தியடித்து தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்கள். டிரேடர்களின் தகுதிக்கு (வங்கிகள், ரிசர்வ் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனிமனிதர்கள்) தகுந்தாற்போல் கிடைக்கும் தகவல்களும் மாறுபடுகின்றன. இன்ஃபர்மேஷன் ஒரே நேரத்தில் கிடைக்கவேண்டும் எனச் சட்டம் போடவும் முடியாது. ஏனென்றால் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு விவரங்கள் என ஒரு கட்டுக்குள் அடங்காத கண்டம் விட்டு கண்டம் தாவும் விஷயங்கள் இதில் உள்ளன!

உதாரணமாக, ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைமை குறித்த புள்ளி விவரங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால் மற்றவர்களுக்கு? இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதம் குறிப்பிட்ட தேதியன்று மானிட்டரி பாலிசியை வெளியிடும்போதுதான் தெரியவரும். ரிசர்வ் வங்கி விரும்பினால் முன்கூட்டியே அதாவது செப்டம்பரிலேயே கரன்சியைத் தேவையான திசையில் கொண்டு செல்ல இந்தத் தகவலை உபயோகித்திருக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த விவரம் தெரியாமல் செப்டம்பரில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக கரன்சி மார்க்கெட்டில் நீச்சலடித்திருந்தீர்கள் என்றால் நஷ்டப்பட்டிருப்பீர்கள்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ட்டை மட்டும் பார்த்தே கரன்சி வியாபாரம் செய்து விடலாம் என்பது போன்ற ஒரு கருத்து தொடர்ந்து வெளியிடப்படுவதை இணையதளங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்திருப்பீர்கள். டெக்னிக்கல் சார்ட்டை வழிநடத்திச் செல்வது கரன்சிகளின் ஃபண்டமென்டல்கள்தான். உலகப் பொருளாதார நடவடிக்கைகளின் ஃபண்டமென்டல் விஷயங்களையும், டிமாண்ட், சப்ளைகள் அடங்கிய டெக்னிக்கல் சார்ட்களையும் சேர்த்துப் பிரதிபலிப்பதுதான் ஒரு கரன்சியின் மதிப்பு. எனவே ஃபண்டமென்டலை மட்டும் வைத்தோ அல்லது டெக்னிக்கல் களை மட்டும் வைத்தோ, கரன்சி டிரேடிங் செய்யமுடியாது. வெற்றி பெற இவை இரண்டையும் சம அளவில் கட்டாயமாக உபயோகித்தாகவேண்டும்.

ஒரு கரன்சி pair-ஆக டிரேடிங் செய்ய முடிவு செய்யும்போது அந்த முடிவு லாபமாக இருக்கும் வாய்ப்புகளை அதிகமாக்க எந்தெந்த டூல்கள் உதவும் என்பதைத் தேர்ந்தெடுப்பதுதான் கரன்சி டிரேடிங்கில் இருக்கும் பெரிய சவால்! இந்த சவாலை எதிர்கொள்ள எது கரன்சியின் மதிப்பை நடத்திச் செல்கிறது எனப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு கம்பெனியின் ஃபண்டமென்டல் என்பது பெரும்பாலும் நம்பர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. விற்பனை, லாபம், விற்பனை குறித்த ஃபோர்காஸ்ட் என எல்லா விஷயங்களும் நம்பர்களில் தெளிவாகச் சொல்லிவிடலாம். ஆனால், ஒரு கரன்சியின் ஃபண்டமென்டல் என்பது நம்பர்களால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒரு சில செய்திகள், ஒரு சிலரின் மனநிலைகள் கூட கரன்சியின் மதிப்பைப் பெரிதும் பாதிக்கும். அந்த விஷயங்கள் என்னென்ன எனப் பார்க்கலாம். உதாரணமாக, டாலரின் மதிப்பை வழிநடத்திச் செல்லும் சில விஷயங்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சீனாவின் சென்ட்ரல் வங்கிகளின் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் டாலர் போகும் திசையைப் பற்றிய சென்டிமென்ட்டை மாற்றக்கூடியது;

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் தலைநகரங்களில் இருந்து வரும் பயத்தை உண்டு பண்ணி டிரேடர்களை எமோஷனல் ஆக்கும் செய்திகள்;

அமெரிக்காவில் உள்ள ரீடெய்ல் ஸ்டோர்களின் மாதாந்திர சேல்ஸ் பற்றிய அறிக்கை டாலரின் இடைக்கால போக்கைப் பாதிக்கக் கூடியது;

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை;

அமெரிக்காவில் வீடுகளின் விற்பனை எண்ணிக்கை.

என அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோன்ற ஒவ்வொரு விதமான டேட்டாக்களும் டாலரின் மீதான சென்டிமென்ட்டை மாற்றுகிறது. இந்த மாதிரியான சென்டிமென்ட் மாறுதல்கள்தான் விலை ரியாக்ஷன்களையும், டாலரை வாங்க ரெடியாக இருப்பவர்கள் மற்றும் விற்க ரெடியாக இருப்பவர்களின் மனநிலையையும் மாற்றிவிடுகிறது.

சென்ற மூன்று அத்தியாயங்களில் நாம் தியரிடிக்கலாக கரன்சியின் விலை எவ்வாறு மாறுபடக்கூடும் எனப் பார்த்தோம். இப்போது மார்க்கெட்டில் கரன்சியின் விலையை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன எனப் பார்ப்போம்.


வட்டிவிகிதம்

ஒரு நாட்டில் உள்ள வட்டி விகிதம்தான் கரன்சியின் போக்கை நிர்ணயிக்கும் தலையாய விஷயமாகும். ரிசர்வ் வங்கிகள் நாட்டினுடைய பொருளாதாரத்தின் ஓட்டத்தை கட்டுக்குள் வைக்க வட்டிவிகிதத்தை ஒரு த்ராட்டில் போல உபயோகிக்கின்றன. எனவே, இந்த த்ராட்டிலில் வரும் மாற்றங்கள் கரன்சியின் மதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகிவிடுகிறது.

வட்டிவிகிதத்தில் நாடுகளுக்கிடையேயான வித்தியாசம்!

ஒரு நாட்டில் நிலவும் வட்டிவிகிதம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை இழுக்கும் காந்தசக்தியாக இருக்கிறது. உதாரணமாக, இந்திய ரிசர்வங்கி திடீரென வட்டிவிகிதத்தை 15 சதவிகிதமாக்குகிறது என வைத்துக்கொள்வோம்... உடனடியாக எந்தெந்த நாடுகளில் எல்லாம் வட்டிவிகிதம் 15 சதவிகிதத்துக்குக் கீழேயுள்ளதோ, அங்கிருந்து பணம் இந்தியாவை நோக்கி வர ஆரம்பித்துவிடும். அதன்மூலம் அதிக வட்டியில் முதலீடு செய்து லாபம் பார்க்க முயற்சிப்பார்கள்.

இப்படி வட்டி குறைந்த நாடுகளில் இருந்து வட்டி அதிகமான நாடுகளுக்கு பணம் செல்வதைத்தான் 'கேரி டிரேட்' என குறிப்பிடுவார்கள். வட்டிவிகிதம் குறைவாக உள்ள நாட்டிலிருந்து பணம் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும்போது அதிகமாக வாங்கப்படும் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுகிறது. அதிகமாக விற்கப்படும் அந்த நாட்டின் கரன்சி மதிப்பிழக்கிறது.

இப்படி நடக்கும்போது எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணம் வருகிறதோ, அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகப்படுத்தினால் உடனடியாக பணம் திரும்பிச்செல்ல முயற்சிக்கும். அப்படித் திரும்பிச் செல்லும்போது இந்திய ரூபாய் அதிகமாக விற்கப்பட்டு மதிப்பிழக்கும். இந்திய ரூபாயை விற்று வாங்கப்படும் மற்ற கரன்சிகளின் மதிப்பு கூடும்.

இன்ஃப்ளேஷன்

இன்ஃப்ளேஷனை வட்டிவிகிதத்தின் உடன்பிறப்பு என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் அனைத்து நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் தங்களுடைய இன்ஃப்ளேஷன் டார்கெட்டைச் சொல்ல ஆரம்பித்துவிட்டன. இன்ஃப்ளேஷன் அதிகமாகிவிடும் என்ற பயம் ஒரு நாட்டைப் பிடித்து ஆட்டும்போது, கரன்சி மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் அந்த நாட்டில் வட்டி அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது எனப் புரிந்துகொண்டு வியாபாரத்தில் குதிக்கின்றனர். இன்ஃப்ளேஷன் ஃபாரெக்ஸ் டிரேடர்களையும் ரிசர்வ் வங்கிகளையும் பயமுறுத்தும் ஒரு பூதம். இந்தப் பூதம் அடிக்கடி ஷாக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் கூட இன்ஃப்ளேஷனை துல்லியமாகக் கணக்கிடுவது மற்றும் ஃபோர்காஸ்ட் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இதையெல்லாம் படித்துவிட்டு ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்ய முதலில் பெரிய பொருளாதார நிபுணராக வேண்டியிருக்கும் என நினைத்து விடாதீர்கள். எல்லா நாட்டின் ரிசர்வ் வங்கிகளும் இன்ஃப்ளேஷன் குறித்த பல இண்டிகேட்டர்களை அவற்றின் வெப்சைட்டுகளில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவற்றை தொடர்ந்து டிராக் செய்து வந்தாலே போதுமானது.

அடுத்த இதழில்... குருடாயிலின் விலை, மெட்டல்களின் விலை, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு, கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் முதலியவை கரன்சியின் மதிப்பை 


எப்படிப் பாதிக்கும் எனப் பார்ப்போம்...






எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 8

கரன்சி வியாபாரத்துக்கும் ஷேர் வியாபாரத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஷேர் வியாபாரம் செய்ய எந்த ஷேரை வாங்குவது என்பதை மட்டும் முடிவு செய்தால் போதும். உதாரணத்துக்கு, 'இன்ஃபோசிஸ்' ஷேரை வாங்கவேண்டும் என்றால் ரூபாயைக் கொடுத்து வாங்கிவிடலாம். இன்ஃபோ சிஸ்-ன் ஃபண்டமென்டல் நிலையை மட்டும் பார்த்து வாங்கினால் போதும். கரன்சி யில் இதையும் தாண்டி இன்னொரு விஷயம் குறித்தும் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்.

கரன்சி Pair-களாக டிரேட் ஆகிறது. அதாவது, ஒரு கரன்சியை விற்றுத்தான் மற்றொரு கரன்சியை வாங்க வேண்டியிருக்கும். உதாரணமாக, ரூபாயின் மூலமாக டாலரை வாங்க நினைக்கிறோம் என்றால், டாலர் மதிப்பிடப்படும் கரன்சியாகவும் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட உபயோகிக் கப்படும் கரன்சியாகவும் இருக்கும். எனவே ஒரு கரன்சியை வாங்கி லாபம் பார்க்க நினைக்கும் வேளையில், வாங்கும் கரன்சியின் ஃபண்டமென்டல் நிலைமையும், எந்த கரன்சியைக் கொடுத்து வாங்கப் போகிறோமோ அதன் ஃபண்டமென்டல் நிலைமையும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ரூபாயைக் கொடுத்து டாலரை வாங்குவதாக இருந்தால் டாலர் மற்றும் ரூபாயின் ஃபண்டமெண்டல் நிலைமை நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால், ரூபாயின் ஃபண்ட மென்டல் டாலரை விட ஸ்ட்ராங் காக இருந்தால் டாலரை வாங்கு வதில் பிரயோஜனம் இல்லை. இந்த ஃபண்டமென்டல் நிலைமையைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு விஷயம்தான் 'பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்' என்கிற 'பி.ஓ.பி.'

இந்த 'பி.ஓ.பி.' என்ற வார்த்தை நியூஸ் பேப்பர்கள், ஆர்.பி.ஐ-யின் அறிக்கைகள், நிதியமைச்சகத்தின் அறிக்கைகள், பொருளா தாரம் குறித்த விவாதங்கள் ஆகியவற்றில் அடிக்கடி இடம் பெறுவதைப் பார்த்திருக்கலாம். மிகச் சாதாரணமான ஒரு வார்த்தைதான் இது என்றாலும் கூட, அதுகுறித்து நிறைய பேர் தெளிவில்லாமல்தான் இருக்கிறார் கள். அதற்குக் காரணம் இந்த வார்த் தையை பலர் தவறான அர்த்தத்தில் உபயோகிப்பதுதான்.

கரன்சி வியாபாரம் செய்ய இந்த பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட் எப்படித் தயாரிக்கப் படுகிறது எனத் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அது அரசாங்கத்தின் வேலை. ஆனால், பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டின் மூன்று முக்கிய உபயோகத்தினைப் பற்றி அவசியம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அதற்கு முதல்படியாக அந்த ஸ்டேட்மென்ட்டில் என்னென்ன இருக்கும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.

பி.ஓ.பி. என்பது ஒரு புள்ளிவிவர அறிக்கை. உதாரணமாக, இந்தியா மற்ற உலக நாடுகளுடன் ஒரு வருடத்தில் செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல்-வாங்கல்களை ஒரு டபுள் என்ட்ரி சிஸ்டத்தில் என்டர் செய்து ஸ்டேட்மென்ட் போட்டால் அது கீழ்க்கண்ட விஷயங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

1) இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி (பொருள் மற்றும் சர்வீஸ்).

2) இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் நடுவே வங்கிக் கணக்குகளில், ஷேர்களில், பாண்டுகளில், ரியல் எஸ்டேட்டில் செய்யப்பட்ட முதலீடுகள்.

இவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம், வெளிநாடு களுக்கு இந்தியாவில் இருந்து சென்ற பணம், மற்றும் நிகர நிலைமை... அதாவது மொத்தத்தில் ஒரு வருடத்தில் அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு உள்ளே வந்ததா? இந்தியாவின் கையிலிருந்த செலாவணி கரைந்ததா? அல்லது கையில் செலா வணி இல்லாததால் அந்நியச் செலாவணி கடன் வாங்கி காலந்தள்ள வேண்டியிருந்ததா என்பது தெரிந்துவிடும்.

வெளியே சென்ற கரன்சி அதிகம் என்றால்...

உள்ளே வந்த அந்நிய கரன்சியை விட வெளியே சென்றது அதிகமென்றால், ரூபாய் மதிப்பிழந்திருக் கும். எப்படி? அந்நிய கரன்சி அதிகமாக வெளியே செல்லும்போது ரூபாய் விற்கப்பட்டு அந்நிய கரன்சி வாங்கப்பட்டிருக்கும். அப்போது அதிகமாக வாங்கப்படும் அந்நிய கரன்சியின் மதிப்பு கூடியிருக்கும். அதிகமாக விற்கப்படும் ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும்.

உள்ளே வந்த கரன்சி அதிகம் என்றால்...

அந்நிய கரன்சி வெளியே சென்றதை விட, உள்ளே வந்தது அதிகமென்றால் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும். எப்படி? அந்நிய கரன்சி அதிகமாக உள்ளே வரும்போது அந்த கரன்சி விற்கப்பட்டு ரூபாய் வாங்கப்பட்டிருக்கும். அப்போது அதிகமாக வாங்கப்படும் ரூபாயின் மதிப்பு கூடியிருக்கும்.

பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டில் எவையெல்லாம் இருக்கும்?

ஒரு நாட்டின் பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டில் ஒரு வருடத்தில் அது மற்ற நாடுகளுடன் செய்த வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மூன்று விதமாக குரூப் செய்யப்பட்டிருக்கும்.

a. கரன்ட் அக்கவுன்ட்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சர்வீஸ்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, வட்டி, டிவிடெண்ட், தானம் (Aid) கொடுத்தது/பெற்றது.

b. கேப்பிட்டல் அக்கவுன்ட்: டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் (எஃப்.டி.ஐ.), போர்ட் ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் (எஃப்.ஐ.ஐ.), இரண்டு நாடுகளில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக வாங்க மற்றும் விற்கப்பட்ட உற்பத்தி செய்யப்படாத விஷயங்கள் (பொதுவாக ஃபை னான்ஸியல் அசெட்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட்), வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட/டெபாசிட்டாக வைக்கப்பட்ட தொகைகள், ஷேர்கள், பாண்டுகள், ரியல் எஸ்டேட்.

c. அஃபிஷியல் ரிசர்வ் அக்கவுன்ட்: வாங்கிய அல்லது விற்ற சில ரிசர்வ் அஸெட்கள். உதாரணமாக டாலர், ஃபாரின் எக்ஸ்சேஞ்ச், தங்கம், ஸ்பெஷல் டிராயிங் உரிமைகள் போன்றவை.

அஃபிஷியல் ரிசர்வ் என்பது ஒரு நாட்டின் சென்ட்ரல் பேங்க் (ஆர்.பி.ஐ.) தன் கையில் வைத் திருக்கும் டாலர், தங்கம் மற்றும் ஸ்பெஷல் டிராயிங் உரிமைகள் போன்றவைகள்.

ஒரு நாட்டின் (கரன்ட் அக்கவுன்ட்) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலைமைதான் கரன்சியின் மதிப்பை உடனடியாகப் பாதிக்கும் விஷயம். ஏற்றுமதியை விட மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாட்டின் கரன்சி மதிப்பிழக்கும். ஏற்றுமதி/இறக்குமதி கரன்ட் அக்கவுன்ட்டின் கீழ் வருகிறது. எனவே, கரன்ட் அக்கவுன்ட்டில் துண்டு (டெஃபிசிட்) பெரிதாக விழுந்தால் கரன்சியின் மதிப்பு குறையும்.

அதாவது, இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் போது கம்பெனிகள் ரூபாயை விற்று டாலரை வாங்குவார்கள். ரூபாய் மதிப்பிழக்கும். அப்படி மதிப்பிழக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் சரக்கின் விலையும் கூடும். எனவே ரூபாயின் மதிப்பை ஸ்டெபிலைஸ் செய்ய ஆர்.பி.ஐ. கையில் இருக்கும் (அஃபிஷியல் ரிசர்விலிருந்து) டாலரை விற்கும். ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையால் அதன் அஃபிஷியல் ரிசர்வ் குறையும். அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு கூடும். தொடர்ந்து இறக்குமதி அதிகமாகவேயிருந்து, ஆர்.பி.ஐ. கையில் இருக்கும் ரிசர்வ் எல்லாம் காலியாகிவிட்டால், ஆர்.பி.ஐ. வெளிநாட்டிலிருந்து டாலரைக் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஏனெனில், கையில் டாலரில்லாமல் ஆர்.பி.ஐ. இருந்தால், டாலர் மதிப்பை நாட்டு நலனுக்கேற்ப ஆர்.பி.ஐ-யால் மேனேஜ் செய்யமுடியாது.

அதேபோல் பி.ஓ.பி. மிகவும் பாசிட்டிவ் ஆகி, ரூபாயின் மதிப்பு கூடிக்கொண்டே போனால், ஏற்றுமதியாளர்கள் தொழில் நடத்த முடியவில்லை எனக்கூக்குரலிடுவார்கள்... (டாலர் மதிப்பு 2007-ல் ரூபாய் 38 ஆனபோது அவர்கள் தவித்தது போல). அப்போது ஆர்.பி.ஐ. மார்க்கெட்டில் சென்று டாலர்களை வாங்கி அதன் மதிப்பைக் கூட்டி ரூபாயின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் இறங்கும். அதுபோன்ற சூழ்நிலையில் அஃபிஷியல் ரிசர்வின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பி.ஓ.பி. ஸ்டேட்மென்ட்டின் மூன்று உபயோகங்கள்:

1. ஒருநாட்டின் கரன்சிக்கு ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமிருக்குமா, அல்லது சப்ளை அதிகமாக இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, இந்தியா ஒரு வருடத்தில் 1,000 டாலருக்கு இறக்குமதியும் 100 டாலருக்கு ஏற்றுமதியும் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... கரன்சி சந்தையில் ரூபாயின் நிலை என்னவாகும்? இறக்குமதி மதிப்பில் ($1,000) இருந்து ஏற்றுமதி மதிப்பினைக் ($100) கழித்துவிட்டால் மீதி 900 டாலர்களை இந்தியா அமெரிக்காவுக்குக் கொடுக்கவேண்டும். இந்த 900 டாலர்களை கரன்சி மார்க்கெட்டில் வாங்க இந்திய இறக்குமதியாளர்கள் ரூபாயை விற்று அந்த 900 டாலர்களை வாங்கவேண்டும். அதிகமாக விற்கப்படும் ரூபாய் மதிப்பிழக்கும். வாங்கப்படும் டாலர் மதிப்பு கூடும். உதாரணமாக, 1 டாலரின் மதிப்பு 38 ரூபாயிலிருந்து 45-ரூபாய்க்குப் போனால் டாலரின் மதிப்பு கூடுகிறது; ரூபாயின் மதிப்பு குறைகிறது.

2. ஒரு நாட்டுடன் மற்ற நாடுகள் நல்ல தரமான மற்றும் தடையற்ற பிஸினஸைத் தொடர வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த நாட்டின் பி.ஓ.பி. பொசிஷன் மிக மோசமாகிவிடும். எனவே அந்த நாட்டின் அரசு இறக்குமதிக்கு டிரேட் பேரியர்ஸ்/ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் (கஸ்டம்ஸ் டூட்டி அதிகரித்தல்/ அட்வலோரம் டூட்டி/டம்ப்பிங் டூட்டி போன்றவை) கொண்டுவரலாம். இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்போது அந்த நாடு எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடும் தங்களது இறக்குமதிக்கு இதேபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவரக்கூடும். அப்படிச் செய்தால் நடந்துகொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச ஏற்றுமதியும் குறைந்துவிடலாம். அதானால் கரன்சி மேலும் மதிப்பிழக்கலாம்.

3. ஒரு நாடு எந்த அளவுக்கு தொழில் ரீதியான திறமை மற்றும் வல்லமை படைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மிகவும் மோசமான பி.ஓ.பி. பொசிஷனைவைத்தே அந்த நாட்டின் டொமஸ்ட்டிக் இண்டஸ்ட்ரீஸ் உலக மார்க்கெட்டில் போட்டி போடத் தகுதியற்றவையாக இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிடலாம். அதைக்கொண்டு அந்த நாட்டு கரன்சியின் மதிப்பு பெரிய அளவில் கூடாது என்பதை அறியலாம்.

அடுத்த இதழில் கரன்சி டிரேடிங்குக்கும் ஸ்டாக் மார்க்கெட்டுக்கும் உள்ள மற்றுமொரு பெரிய வித்தியாசம் என்ன எனப் பார்ப்போம்.

கரன்சியிலும் கலக்கலாம் - 7

கரன்சி விவகாரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்குக் கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டியதிருக்கும். காரணம் கரன்சி விஷயத்தில் பல காரணிகள் இருப்பதுதான். இந்த இதழில் ஒரு பொருள் ஒரு நாட்டிலும் இன்னொரு நாட்டிலும் விற்கப்படும் விலையைக்கொண்டு கரன்சியின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவது என்பது குறித்துப் பார்க்கலாம்...

ராம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே பைலட் ஆக வேலை பார்க்கிறான். ஜப்பான், சிங்கப்பூர், லண்டன் எனப் பறந்துகொண் டேயிருப்பான். அமெரிக்காவில் பிறந்ததனாலோ என்னவோ அவன் மெக்டொனால்டு பர்கருக்கு அடிமை. அதிலும் பிக்மேக் எனும் வெரைட்டி என்றால் கொள்ளைப் பிரியம். ஒருமுறை அவன் ஹாங்காங் போக நேர்ந்தது. அங்கே இறங்கி ஓட்டலில் செக்இன் செய்துவிட்டு ஒரு வாக் போனான். வழியில் தென்பட்ட ஒரு மெக் டொனால்டு அவுட் லெட்டுக்குள் நுழைந்து, தனது ஃபேவரிட் அயிட்டமான பிக்மேக் பர்கருக்கு ஆர்டர் கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்தால் ஒரு பிக்மேக் 13.30 ஹாங்காங் டாலர் என்றிருந்தது. ராம் ஹாங்காங் ஏர்போர்ட்டில் தன்னிடமிருந்த அமெரிக்க டாலரை மாற்றியபோது ஒரு டாலருக்கு 7.57 ஹாங்காங் டாலர்கள் கொடுத்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிக்மேக் சாப்பிட்டபோது அங்கே விலை 3.54 யு.எஸ். டாலர். அந்தக் கணக்கில் பார்த்தால் ஹாங் காங்கில் பர்கரின் விலை 27.44 ஹாங்காங் டாலராக இருக்கவேண்டும். ஆனால், 13.30 டாலர் என்றுதான் சொல்கிறார்கள். ஒருவேளை மெக்டொனால்டு நிறுவனம் அமெரிக்காவில் அதிக விலைக்கும் ஹாங்காங்கில் குறைவான விலைக்கும் வேண்டுமென்றே விற்கிறதா? சரி, டேஸ்ட்டில் ஏதாவது சூட்சுமம் வைத்திருப்பார்களோ என்று பார்த்தால் அதே டேஸ்ட்தான்! அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.

இந்த விலைப் பிரச்னைக்கு மெக்டொனால்டு காரணமா, கரன்சி எக்ஸ்சேஞ்ச் விலை காரணமா? இந்தக் குழப்பம் உங்களுக்கும் வந்திருக்கும் இல்லையா? இது எப்படி எனப் பார்ப்போம்!

ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது? உதாரணத்துக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொருளை அல்லது சர்வீஸை எந்த அளவுக்கு வாங்க முடிகிறது என்பதைப் பொறுத்துதான் ரூபாயின் மதிப்பு இருக்கும். இதைத்தான் 'பர்ச்சேஸிங் பவர்' என்பார்கள்.

இதே வழியில் ஒரு கரன்சியின் மதிப்பு மற்றொரு கரன்சிக்கு எதிராக எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்...

ராமின் கதையையே எடுத்துக்கொள்வோம்... ஹாங்காங்கில் 13.30 ஹாங்காங் டாலருக்கு பர்கர் கிடைத்து, அமெரிக்காவில் அதே பர்கர் 3.54 யு.எஸ். டாலருக்குக் கிடைக்கிறது என்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஹாங்காங் டாலரின் மதிப்பு (13.30/3.54) 3.76- ஆக இருக்கவேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் ராம் ஹாங்காங்குக்கு டூட்டியில்வந்து பர்கர் சாப்பிட்டு லாபமடையமுடியாது. ஆனால், ராம் ஹாங்காங்கில் இறங்கும்போது டாலருக்கெதிரான ஹாங்காங் டாலரின் மதிப்பு 3.76-க்குப் பதிலாக 7.57 ஆக இருந்தது. அதாவது மார்க்கெட்டில் நடப்பு எக்ஸ்சேஞ்ச் ரேட், பர்ச்சேஸிங் பவரின்படி வரும் மதிப்பை விட கிட்டத்தட்ட 50% அதிகமாக உள்ளது. இன்னும் டெக்னிக்கலாகச் சொன்னால் அமெரிக்கன் டாலருக்கெதிராக ஹாங்காங் டாலர் சுமார் 50% மார்க்கெட்டில் பர்ச்சேஸிங் பவர் மதிப்பை விட குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஹாங்காங்கில் இருந்து ராம் மாதிரி ஒரு பர்கர் பைத்தியம் அமெரிக்கா சென்று பர்கர் வாங்கிச் சாப்பிட நினைத்தால் என்னவாகும்? அவர் 3.76 ஹாங்காங் டாலரை எடுத்துச்சென்றால் அமெரிக்காவில் பர்கர் சாப்பிடமுடியாது. அவர் ஊரில் கிடைக்கும் பர்கர் அமெரிக்காவில் இரண்டு மடங்கு விலையாகிறது.

'லா ஆஃப் ஒன் பிரைஸ்' என்ற ஒரு தியரி என்ன சொல்கிறது தெரியுமா? 'ஒரே மாதிரியான தரம் மற்றும் குணம் உள்ள பொருட்கள் அனைத்தும் உலகெங்கிலும் ஒரே விலையில்தான் விற்கப்படும்!' என்கிறது அந்த தியரி. ராம் அமெரிக்காவிலும் ஹாங்காங்கிலும் விரும்பிச் சாப்பிட்ட பர்கரில் ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே 'லா ஆஃப் ஒன் பிரைஸ்' படி ஒரே விலைதான் இருந்திருக்கவேண்டும்.

'லா ஆஃப் ஒன் பிரைஸ்' தியரி ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீது அப்ளை செய்யப்படும்போது (கமாடிட்டி பேஸ்கட்) 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி தியரி' நமக்குக் கிடைக்கிறது. 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி தியரி' என்ன சொல்கிறது என்றால் இதுபோன்ற விலை வித்தியாசம் வெளிப்படையாக இருக்கும்போது (அதாவது 3.76-க்குப் பதில் 7.57-ஆக இருக்கும்போது) நாளடைவில் அமெரிக்கன் டாலருக்கெதிராக ஹாங்காங் டாலரின் மதிப்பு 7.57-லிருந்து 3.76-க்கு மாறிவிடும் என்கிறது.

மேலே குறிப்பிட்டதைப் போன்ற டாலருக் கெதிரான 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி'-யின்படி வரும் மதிப்பை விட குறைவான மதிப்பை ஒரு கரன்சி அடையும்போது என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.

ஹாங்காங்கிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மிக சீப்பாகிவிடும். உதார ணமாக, ஒரு புத்திசாலி தொழிலதிபர் பர்கரை ஹாங்காங்கில் இருந்து வாங்கி அமெரிக்காவில் விற்றால் அவருக்கு சூப்பர் லாபம் கிடைக்கும். இப்படி அவர் இறக்குமதி செய்யும் பிராசஸில் என்ன நடக்கும்?

அவர் அமெரிக்க டாலரை விற்று ஹாங்காங் டாலர் வாங்குவார்.

அதிகமாக விற்கப்படும் அமெரிக்க டாலர் மதிப்பிழக்கும்.

அதிகமாக வாங்கப்படும் ஹாங்காங் டாலரின் மதிப்பு கூடும்.

இப்படி ஹாங்காங் டாலரின் அமெரிக்க டாலருக் கெதிரான மதிப்பு கூடி, ஒரு டாலரின் மதிப்பு 7.57 ஹாங்காங் டாலரிலிருந்து 3.76-க்கு வந்து நின்றுவிடும் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

இதுபோன்ற விலை மாறுதல்கள் சில நேரங்களில் நிகழாது. எப்போதெல்லாம் என்கிறீர்களா?

1. ஹாங்காங் கவர்ன்மென்ட் கரன்சி மார்க்கெட்டில் புகுந்து வியாபாரம் செய்யும்போது...

2. வேண்டுமென்றே ஹாங்காங் டாலரை விற்று அதன் மதிப்பைக் குறைக்கும்போது...

3. ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் அதிகமாக ஸ்பெகுலேஷன் நடக்கும் வேளையில்...

4. இந்த 'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி' மதிப்புக்கும் (3.76), ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் டாலருக்கெதிரான ஹாங்காங் டாலரின் விலைக்கும் (7.57) உள்ள வேற்றுமையும் மீறி, லாங் டேர்ம் முதலீடுகள் அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கை நோக்கி வேக மாகச் சென்றுகொண்டிருக்கும்போது...

5. அமெரிக்கா மற்றும் ஹாங்காங்கின் பொருளாதாரங்கள் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்திக்கும்போது...

'பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி' ரியல் ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் மிகவும் பெரிய அளவில் பிராக் டிகலாக உதவாத ஒன்றாக இருப்பினும், இந்த தியரி உலக நாடுகள் குறித்து பொருளாதார ரீதியாக ஆய்வு செய்வதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. முதலாவதாக, இந்த தியரியை வைத்து ஒரு நாட்டின் கரன்சி மற்ற கரன்சிகளை விட ஃபாரெக்ஸ் மார்க்கெட்டில் அதிக மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறதா என்பதை அறியலாம். இரண்டாவதாக, உலக நாடுகளின் மத்தியில் பொருளாதார ரீதியான ஓர் ஒப்பீடைச் செய்ய இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது.

உதாரணத்துக்கு உலகில் உள்ள 15 நாடுகளின் பொருளாதார அளவை (2001-ம் ஆண்டு ஜி.என்.பி.மதிப்பீடு) பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி மூலமும், மார்க்கெட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் மூலமும் ஒப்பிட்டு (மேலே உள்ள இந்திய பொருளாதாரம் 2001 நிலவரம்) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி ரேட்டில் வேல்யூ செய்தால் இந்தியாவின் நிலைமை உலகின் பொருளாதார வரிசையில் 12-லிருந்து 4-க்கு மாறிவிடுகிறது!

கரன்சியின் விலையில் சம்பந்தப்பட்ட வேறு சில விஷயங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்...







எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 6

கடந்த இதழில் கரன்சியின் மதிப்பு எப்படி மாறுகிறது என்பதைப் பார்த்தோம். இனி ஒரு நாட்டின் வட்டி விகிதம் அந்நாட்டு கரன்சியின் மதிப்பை எப்படிப் பாதிக்கும் என்று பார்க்கலாம்...

சரவணனுக்கு அவனுடைய பணம் எப்போதும் குட்டி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதைத் தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு எப்படியாவது லாபம் பார்த்துவிடுவான். அமெரிக்காவில் கூடுதல் சம்பளத்தில் வேலை கிடைக்கவும் அங்கே போனவன் ஆரம்பத்தில் கொஞ்சம் தவித்துதான் போனான். அதன்பிறகு அங்கேயும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தைக் குட்டிபோட வைக்க ஒரு வழி இருப்பதைக் கண்டுகொண்டான். அந்த வழி கரன்சி ஆர்பிட்ரேஜ் செய்வது. வழிகாட்டியது அங்கே அவனுடன் வேலைபார்க்கும் ஒருவர்தான்.

அவர் வேலை இருந்தாலும் இல்லா விட்டாலும் தன்னுடைய மானிட்டரில் பிஸினஸ் வெப்சைட்டுகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பார். அதில் டாலர், பவுண்ட் ஆகியவற்றின் ஸ்பாட் மற்றும் ஃபார்வர்டு விலையும் பல்வேறு நாடுகளின் வட்டி விகிதங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அவரிடம்தான் ஸ்பாட் என்றால் என்ன, ஃபார்வர்டு என்றால் என்ன என்று கற்றுக்கொண்டான். ''ஸ்பாட் என்றால் இன்றைக்கு ஒரு பவுண்ட் வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு டாலர் கொடுக்கவேண்டும் என்பது. ஃபார்வர்டு என்பது ஒரு வருடம் கழித்து ஒரு பவுண்ட் வேண்டும் என்றால் அதற்காகக் கொடுக்க வேண்டிய டாலர் எவ்வளவோ அதற்கான ஒப்பந் தத்தினை இன்றே செய்துகொள்வது'' என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

அப்படித்தான் ஒரு நாள் பவுண்ட்-ன் ஸ்பாட் விலை 1.50 டாலராகவும், ஒரு வருட ஃபார்வர்டு விலை 1.48 டாலராகவும் இருந்ததையும் கவனித்துவிட்டு மண்டை குழம்பிப் போனான். ''என்ன இது... இன்னைக்கு ஒரு பவுண்ட் வேண்டுமென்றால் 1.50 டாலர் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு வருஷம் கழித்து வேண்டுமென்றால் 1.48 டாலர் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது'' என்று நண்பரது தலையைப் போட்டு உருட்டினான். அவரோ கூலாக அமெரிக்காவில் பேங்க் வட்டி 5% என்பதையும் அதுவே லண்டனில் வட்டி 8 சதவிகிதமாக இருப்பதையும் காட்டினார். சரவணனும் புரிந்துகொண்டான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கரன்சி ஆர்பிட்ரேஜைக் கற்றுக் கொண்டவன், அடுத்தகட்டமாக தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தான்.

அவனது திட்டம் இதுதான்... தனது கணக்கில் வங்கியில் இருக்கும் ஒரு லட்சம் டாலருக்கு வட்டி 5 சதவிகிதம்தான் கிடைக் கும். அதாவது ஒரு வருடத்தில் 5,000 டாலர் தான் கிடைக்கும். அதற்குப் பதிலாக அந்த ஒரு லட்சம் டாலரை இன்றைய ஸ்பாட் விலையில் (ஒரு பவுண்டுக்கு 1.50 டாலர் என்ற நிலையில்) பவுண்டாக மாற்றிவிடுவது. அப்படி மாற்றினால் 66,666.67 பவுண்ட் கிடைக்கும். அதை லண்டன் பேங்க்கில் டெபாசிட் செய்துவிடுவது. அங்கே 8 சதவிகித வட்டி கிடைக்கும் என்பதால், ஒரு வருடம் கழித்து 72,000 பவுண்ட் ஆகிவிடும். அந்தத் தொகையை ஃபார்வர்டு கான்ட்ராக்ட் மூலமாக டாலருக்கு மாற்றிவிடுவது. தற்போதைய நிலையில் 1.48 டாலர் என்ற ரேட்டுக்கு மாற்றினால் 1,06,560 டாலர் ஆகிவிடும். அதாவது அமெரிக்க வங்கியில் போட்டு வைத்திருந்தால் 1,05,000 டாலர்தான் கிடைக்கும். இந்த வழியில் 1,560 டாலர் அதிகமாகக் கிடைக்கும். இதுதான் சரவணனின் கணக்கு.

அதற்கு பின் அவ்வப்போது இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைத் தவறாமல் பயன்படுத்தி லாபம் பார்த்துவிடுவான். சில சமயங்களில் அவன் பணத்தைப் போடுவதற்குள் ஃபார்வர்டு ரேட் மாறிவிட, ஏமாற்றத் துடன் திரும்ப வேண்டியதாகி விடும். ஆனாலும் எப்படியாவது வருடத்துக்கு பத் தாயிரம் இருபதாயிரம் டாலராவது லாபம் பார்த்துவிடுவான்.

இதைப் படித்ததும் நாமே இப்படிச் செய்து லாபம் பார்க்கலாமே என்று தோன்றுகிறதா? ஆனால், அதுஅவ்வளவு சுலபம் இல்லை. கரன்சி மார்க்கெட்டில் நடக்கும் இந்த ஜாலத்தை 'இன்ட்ரஸ்ட் ரேட் பேரிட்டி' எனச் சொல்வார்கள். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மார்க்கெட்டில் இதுபோன்ற வாய்ப்புகள் சில நிமிடங்கள் இருந்தாலே அது பெரிய விஷயம்!

சரி அது இருக்கட்டும், சரவணனைப் போன்ற ஏராளமானவர்கள் இப்படிச் செய்யும்போது அதனால் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் என்ன நடக்கும் எனப் பார்ப் போம்... நிறைய பேர் டாலரில் கடன் வாங்கி, பவுண்ட் ஆக மாற்ற முயற்சி செய்வார்கள். எனவே லோனுக்கான டிமாண்ட் அதிகமாவதால் டாலரின் (அமெரிக்காவில்) வட்டி விகிதம் ஏறும்.

அப்படி கடன் வாங்குபவர்கள் ஸ்பாட் மார்க் கெட்டில் டாலர்களை விற்று பவுண்டுகள் வாங்கி அதை பேங்க்கில் டெபாசிட் செய்வார்கள். பவுண்டை அனைவரும் துரத்தி துரத்தி வாங்குவதால் பவுண்டின் ஸ்பாட் விலை அதிகரிக்கும். அவ்வாறு வாங்கிய பவுண்டை அத்தனை பேரும் டெபாசிட் போட முயற்சிப்பார்கள். எனவே பவுண்டின் டெபாசிட் சப்ளை அதிகமாகி, அதன் (பிரிட்டனில்) வட்டி விகிதம் இறங்கிவிடும்.

ஒரு வருடம் கழித்து டெபாசிட் முதிர்வுத் தொகையை டாலராக மாற்ற ஃபார்வர்டு கான்ட் ராக்ட் வாங்குவார்கள். அதாவது ஒரு வருடம் கழித்து பவுண்டை விற்பதற்கான ஒப்பந்தம்போட அனைவரும் க்யூவில் நிற்பார்கள். அப்படி விற்கப் படுவதால் ஃபார்வர்டு மார்க்கெட்டில் பவுண்டின் மதிப்பு குறையும்.

இந்த ஹைஸ்பீட் நிகழ்வுகள் விலை வித்தியாசத்தை உடனடியாக நேர் செய்து, ஒரு பாயின்ட்டுக்குப்பின் இதுபோன்ற ஃபண்ட்ஸ் மூவ்மென்ட் செய்து யாரும் லாபம் சம்பாதிக்க முடியாமல் போகும். ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டில் உள்ள வட்டி விகிதம் மாற்றப்படும்போது இது போன்ற வாய்ப்புகள் வந்து உடனடியாக கரன்சிகள் விற்று வாங்கப்பட்டு விலைகள் சீரடைந்துவிடும். எனவே, ஒரு நாட்டின் வட்டி விகிதம் மாறும்போது மாறுதலுக்கு ஏற்றாற் போல் கரன்சியின் மதிப்பு ஏறவோ, இறங்கவோ செய்யும். இப்படியான மாற்றங்கள் நேரடியாக நடந்தாலும் இந்தியா போன்ற சில முழு கன்வர்ட் டபிலிட்டி இல்லாத நாடுகளில் அந்நியர்கள் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து டெபாசிட் செய்து பின்னர் எடுத்துச் செல்லமுடியாது. இதுபோன்ற கரன்சி கட்டுப்பாடுகள் இருப்பதால் இதுபோன்ற நாடுகளில் முழுஅளவில் இந்த பேரிட்டியை எஃபெக்டிவாக கணக்கிடமுடியாது.

ஒரு பொருள் ஒரு நாட்டிலும் மற்றொரு நாட்டிலும் விற்கப்படும் விலையைக்கொண்டு, கரன்சியின் மதிப்பை எஸ்டிமேட் செய்வது எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்...

கரன்சியிலும் கலக்கலாம் - 5

இந்த இதழில் கரன்சியின் மதிப்பு எப்படி மாறுகிறது என்பது குறித்து பார்க்கலாம்... எக்ஸ்சேஞ்ச் ரேட் என்பது ஒரு கரன்சியை மற்றொரு கரன்சியினால் மதிப்பீடு செய்வது என்று கொள்ளலாம்.

நாணயம் விகடன் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் ஷேர் மார்க்கெட்டுக்கு மிகவும் பரிச் சயமானவர்கள். எனவே, ஷேர்களை வைத்தே எளிதாக இதனைப் புரிந்துகொள்ளலாம்...

பொதுவாக ஷேர்களின் மதிப்புக்கும் கரன்சி களின் மதிப்புக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்.எஸ்.இ.) தான் உலகம் என வைத்துக்கொள்வோம். என்.எஸ்.இ-ல் லிஸ்ட் ஆகியுள்ள கம்பெனிகள் (1,302) அத்தனையும் தனித்தனி நாடுகள் என கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது அந்தந்த கம் பெனிகளின் ஷேர்கள்தான் அந்தந்த நாட்டின் கரன்சி எனவும் வைத்துக்கொள்வோம். ஸ்டாக் மார்க்கெட்டில் கம்பெனி நல்ல லாபம் சம்பாதித்த தென்றால் ஷேரின் மதிப்பு அதிகமாகும். ஸ்டாக் மார்க்கெட்டில் ஷேரின் மதிப்பு ரூபாயில் கணக் கிடப்படுகிறது. கம்பெனிகளை நாடாக மாற்றி ஷேர்களை கரன்சியாக மாற்றிவிட்டால் ஒரு கம்பெனி ஷேரின் (கரன்சி) மதிப்பு மற்றொரு கம்பெனியின் ஷேரைக் (கரன்சி) கொண்டுதானே மதிப்பிடவேண்டும்? இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை வைத்துப் பார்க்கலாம்.

என்.எஸ்.இ-ல் எட்சர்வின் கம்பெனியின் இன்றைய சுமாரான மதிப்பு (ஷேர் லாபத்தின் அடிப்படையில்) 100 ரூபாயாகவும், இன்ஃபோசிஸ் கம்பெனியின் சுமாரான மதிப்பு (ஷேர் லாபத்தின் அடிப்படையில்) 2,000 ரூபாயாகவும் இருக்கிறது.

எட்சர்வையும், இன்ஃபோசிஸ்ஸையும் நாம் நாடாக்கிவிடுவோம். இப்போது எட்சர்வ் நாட்டி லிருக்கும் ஒருவர் இன்ஃபோசிஸ் நாட்டுடன் வியாபாரம் செய்ய நினைக்கிறார். அதற்கு அவருக்கு இன்ஃபோசிஸ் கரன்சி தேவைப்படுகிறது. ஒரு இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்க எத்தனை எட்சர்வ் கரன்சி அவர் கொடுக்க வேண்டியிருக்கும்? '20 எட்சர்வ் கரன்சியைக் கொடுத்தால் 1 இன்ஃபோசிஸ் கரன்சி கிடைக்கும்' என எல்.கே.ஜி. குழந்தைகூடச் சொல்லிவிடும். இதுவே மூன்று மாதங்களுக்கு முன்பு எட்சர்வ் ஷேரின் மதிப்பு 25 ரூபாயாகவும் இன்ஃபோசிஸ் 1,700 ரூபாயாகவும் இருந்தது. அப்போது எட்சர்வ் நாட்டிலிருப்பவர் 1 இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்கவேண்டுமெனில் 58.3 எட்சர்வ் கரன்சியைக் கொடுத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களில் திடீரென எட்சர்வ் நாட்டில் ஏதோ சுபிட்சமான விஷயம் நடந்திருக்க வேண்டும். அதனால்தானே எட்சர்வ் கரன்சியின் மதிப்பு அதிகமாகி 58.3-க்கு பதிலாக 20 எட்சர்வ் கரன்சியைக் கொடுத்து ஒரு இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்க முடிகிறது.

எட்சர்வ் ஒரு கம்பெனியாயிருக்கும்போது சுபிட்சம் எதனால் வருகிறது? அதிக வியாபாரம் மற்றும் நல்ல லாபம்! எட்சர்வ் நாடாகும்போது அதன் சுபிட்சம் எதனால் வருகிறது? அது செய்யும் வியாபாரத்தால்! எட்சர்வ் நாட்டின் வியாபார மென்பது அது இன்ஃபோசிஸ் போன்ற மற்ற நாடுகளுடன் செய்யும் வியாபாரத்தினைக் குறிக்கும். எட்சர்வ் நாடு அதிக சாமான்களை இன்ஃபோசிஸ் நாட்டிலிருந்து வாங்கிக் குவித்ததென்றால், அதிக எட்சர்வ் கரன்சியை விற்று இன்ஃபோசிஸ் கரன்சியை வாங்கி, அதன் மூலம் சாமான்களை வாங்கியிருக்கும். அப்படி அதிகமாக விற்கப்பட்டிருக்கும் எட்சர்வ் கரன்சி இன்ஃபோசிஸ் கரன்சிக் கெதிராக மதிப்பிழந்து (20-லிருந்து 30-க்கோ, 35-க்கோ) போயிருக்கும்.

கம்பெனியாக இருக்கும்போது எட்சர்வ் பி அண்ட் எல் மற்றும் பேலன்ஸ் ஷீட் போடுகிறது. எட்சர்வ் கம்பெனி ஷேரின் மதிப்பு தற்போதைய பி அண்ட் எல், பேலன்ஸ் ஷீட், மற்றும் எதிர் வரும் நாட்களில் அது வைத்திருக்கும் பிஸினஸ் திட்டங்களைக்கொண்டு கணிக்கப்படுகிறது.அதுவே எட்சர்வ் நாடாகும்போது அதனுடைய பேலன்ஸ் ஆஃப் பேமென்ட் ஸ்டேட்மென்ட் (வியாபாரம், கடன், முதலீடு இவற்றின் மூலமாக ஒரு வருடத்தில் மற்ற நாடுகளுக்கு அது தந்த பணம்/மற்ற நாடுகளிடம் இருந்து அந்த நாடு பெற்ற பணம்), எதிர் வரும் நாட்களில் அந்த நாட்டின் பொருளாதாரத் திட்டம் மற்றும் பொருளாதார நிலைமை போன்றவற்றைக் கொண்டு கரன்சியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

ஒரு கம்பெனியில் லாபத்தை அதிகரிக்க வழியில்லாமல் ஷேர் கேப்பிட்டலை (முதலீடு) அதிகரித்துக்கொண்டே சென்றால், ஷேரின் சந்தை மதிப்பு குறைந்துகொண்டே போகும். ஏனென்றால் புதிதாகப் போடும் முதலீட்டுக்குத் தேவையான ரிட்டர்ன் கிடைக்காது என்பது உறுதியாகிற பட்சத்தில் சந்தையில் அதை வாங்க ஒருவரும் விரும்பமாட்டார்கள். அதுபோல் நாட்டில் பொருளாதார வளர்ச்சியில்லாமல் கரன்சியை பிரின்ட் செய்து கரன்சி சர்க்குலேஷனை அதிகரித்துக்கொண்டே சென்றால்... கரன்சியின் மதிப்பும் குறையும்!

இன்ஃபோசிஸ் நாட்டில் நிலைமை சரியில்லை என்றால் (பொருளாதாரம், ஏற்றுமதி/இறக்குமதி) இன்ஃபோசிஸ் கரன்சியின் மதிப்பு குறையும். எட்சர்வ் நாட்டில் நிலைமை சூப்பர் என்றால் அதன் மதிப்பு கூடும். ஸ்பாட் கரன்சி டிரேடர்கள் இன்ஃபோசிஸ் கரன்சியை அதிகமாக விற்று எட்சர்வ் கரன்சியை அதிகமாக வாங்குவார்கள். எனவே எட்சர்வ் கரன்சிக் கான டிமாண்ட் அதிகமாகும். இன்ஃபோசிஸ் கரன்சிக்கான சப்ளை அதிகரிக்கும். அதிகமாக விற்கப்படுவது (சப்ளை) மதிப்பிழப்பதும் அதிகமாக வாங்கப்படுவதின் (டிமாண்ட்) மதிப்பு கூடுவதும் ஃபைனான்ஸியல் மார்க்கெட்டின் குணாதிசயம்தானே!

இவை ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வட்டி விகிதம் அந்த நாட்டு கரன்சியின் மதிப்பைப் பாதிக்கும். அது எப்படி என அடுத்த இதழில் பார்ப்போம்.



எக்ஸாட்டிக் டெரிவேட்டிவ்ஸ் டிஜிட்டல் ஆப்ஷன்ஸ்:

டபுள் நோடச் ஆப்ஷன்ஸ்: டாலரின் ரூபாய்க்கு எதிரான மதிப்பு 44-க்கு மேல் 52-க்குள்தான் இருக்கும் என நினைக்கிறீர்கள். இன்றிலிருந்து ஒரு வருடத்துக்கு டாலர் 44-க்கு மேல் 52-க்குள் மட்டும் இருந்தால் 1,000 டாலர் தருவதற்கு ரெடி என ஒரு கான்ட்ராக்ட் மார்க்கெட்டில் கிடைக்கும். அதை பிரீமியம் கொடுத்து வாங்கினீர்கள் என்றால், உங்கள் கணிப்பு சரியாகி 44-யும் 52-யும் டாலர் டச் பண்ணாமல் கடைசிவரை இருந்தால், உங்களுக்கு 1,000 டாலர் கிடைக்கும். ஏதாவது ஒரு லெவலை (44 அல்லது 52) டச் பண்ணிவிட்டால் அத்துடன் கான்ட்ராக்ட் காலாவதியாகிவிடும். நீங்கள் கொடுத்த பிரீமியத்தை முழுவதுமாக இழந்துவிடுவீர்கள். இந்த ஆட்டம் எப்பூடி?!


எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 2

அட என்ன சார் நீங்க, ஏற்கெனவே வியாபாரம் செய்ய ஷேர், ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ், கமாடிட்டீஸ் ஃப்யூச்சர்ஸ்னு ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்குது... இப்ப கரன்சி பற்றி தெரிஞ்சு என்ன ஆகப்போகுது'' என்று கேட்கிறீர்களா? அதற்கான தேவை வந்துவிட்டது! கரன்சி மார்க்கெட்டில் பல விதமான நோக்கத்துடன் வியாபாரம் செய் யலாம். ஏற்றுமதி செய்பவர், இறக்குமதி செய்பவர், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர், ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்பவர் என பலதரப்பட்டவர்களுக்கும் ஏற்ற இடம் இது! ஒவ்வொருவருக்கும் இது எப்படிப் பயன்படக்கூடும் என்பதை முதலில் பார்க்கலாம்... 

ஏற்றுமதியாளர்



பொதுவாக எல்லா ஏற்றுமதியாளர்களும் அந்நியச் செலாவணியில்தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக ஒருவர் டீ-ஷர்ட்டை 40 ரூபாய்க்குத் தயாரித்து, அமெரிக்க கம்பெனி ஒன்றுக்கு 'ஒரு ஷர்ட் ஒரு டாலர்' என்ற விலைக்கு ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒப்பந்தப்படி மாதம் ஒன்றுக்கு 10,000 டீ-ஷர்ட் வீதம் ஒரு வருடத்துக்கு அவர் அனுப்பவேண்டும். அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 50 ரூபாய் என இருக்கிறது என்றால், அவருடைய லாபம் ஒரு டீ-ஷர்ட்டுக்கு 10 ரூபாய்.

சரக்கு கையில் வந்த பிறகே அமெரிக்க கம்பெனி பணத்தை அனுப்பும். அவரும் மாதாமாதம் டாலரைப் பெற்று அதனை ரூபாயாக மாற்றச் சென்றால் அன்றைய டாலரின் மதிப்பில்தான் மாற்ற முடியும். அவர் ஒப் பந்தம் போட்ட சமயத்தில் உள்ள டாலரின் மதிப்புக்கும், டாலரை ரூபாயாக மாற்றப்போகும் சமயத் தில் உள்ள மதிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் டாலரின் மதிப்பு கூடினால் ஏற்று மதியாளருக்கு லாபம். குறைந்தால் நஷ்டம்! இதனால், ஏற்றுமதியாளரின் லாபம் டாலரின் மதிப்பின் போக்குக்குத் தகுந்தாற் போல் மாறிக்கொண்டேயிருக்கும். 

லாபம் கூடிக் குறைந்தால் பரவாயில்லை. சிலசமயம் டாலரின் மதிப்பு அளவுக்கு அதிகமாகக் குறைந்தால் முதலுக்கே மோசமாகிவிடவும் (டீ-ஷர்ட்டின் உற்பத்தி விலைக்குக் கூட கட்டுப்படியாகாமல் போகவும் செய்யும்) சான்ஸ் இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவுடன் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக்மென்டில் அந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் டாலரை ஒரு விலையில் விற்று லாபத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

இறக்குமதியாளர்

இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் இறக்குமதி ஆர்டரை பிளேஸ் செய்யும் நாளுக்கும் பொருள் வந்திறங்கி டாலரில் பணம் கொடுக்கும் நாளுக்கும் இடையே உள்ள காலத்தில் டாலரின் மதிப்பு கூடினால் சரக்கின் விலை அதிகமாகிவிடும். அவ்வாறு சரக்கின் விலை அதிகமாவது லாபத்தைக் குறைத்துவிடும். மிக அதிகமான மதிப்பு யர்வு நடக்கும்போது இறக்குமதி செய்யும் பொருளை விற்க முடியாமல் போய்விடும். இதைத் தவிர்க்க இறக்கு மதியாளர் ஆர்டரை பிளேஸ் செய்தவுடன் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் மார்க்கெட்டில் அந்த ஆர்டரில் உள்ள டாலரை வாங்கி வைத்துக்கொண்டால் அவரால் டாலரின் மதிப்பு மாறுபாட்டின் மூலம் வரும் நஷ்டத்தைத் தவிர்க்கமுடியும்.

சாதாரண மனிதர்கள்

''அடப் போங்க சார்... நான் ஏற்றுமதியும் செய்யவில்லை, இறக்குமதியும் செய்யவில்லை... எனக்கு எதற்கு இந்த மார்க்கெட்?'' என ஒருவர் கேட்டால் அதற்கும் பதிலிருக்கிறது.

சாதாரண மனிதர்களை ஃபாரெக்ஸூடன் சம்பந்தம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். 

சம்பந்தம் உள்ளவர்கள் என்பது மகன், மகள் என ஃபாரினில் வேலைபார்த்து பணம் அனுப்பும் உறவினர்கள் உள்ளவர்கள். இவர்களை ஏற்றுமதியாளர்களுக்குச் சமமாகக் கருதலாம். ஏனெனில் குறிப்பிட்ட இடைவெளியில் டாலரில் பணம் இவர்களுக்கு வந்துகொண்டிருக்கும். மற் றொருவகை மகன்/மகளை ஃபாரினில் படிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள். இவர்களை இறக்குமதி யாளர்களுக்குச் சமமாகக் கருதலாம். இவர்கள் குறிப் பிட்ட இடைவெளியில் டாலரை வாங்கி மகன்/மகளுக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

சம்பந்தம் இல்லாதவர்கள் ஏன் இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்யவேண்டும் எனக் கேட்கிறீர்களா?. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்பவரா? உங்களுக்கும் இதில் சம்பந்தம் உள்ளதே! எஃப்.ஐ.ஐ. முதலீடுகள் எப்படி சந்தை நிலையை மாற்றியமைக்கின்றன? எஃப்.ஐ.ஐ. டாலரில் பணத்தைக் கொண்டுவந்து டாலரை விற்று ரூபாயாக மாற்றி ஷேர்களை வாங்குகின்றன. ஷேரில் லாபம் பார்த்து அவற்றை விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு போகும்போது ரூபாயை விற்று டாலரை வாங்குகின்றன. இதனால் எஃப்.ஐ.ஐ. முதலீட்டுக்கு டாலர் வரும்போது டாலர் மதிப்பு குறைகிறது. அதாவது அதிகமாக டாலர் விற்கப்படுகிறது. ரூபாய் வாங்கப்படுகிறது. அதிகமாக விற்கப்படுவது எந்தச் சந்தையிலும் மதிப்பிழக்கும். அதுபோல அதிகமாக வாங்கப்படும் சரக்கு மதிப்பு பெறும். 

எனவே டாலரில் முதலீடு வரும்போது ரூபாய் மதிப்பு கூடும். முதலீடு திரும்பிச்செல்லும்போது ரூபாயின் மதிப்பு குறையும். எனவே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் எஃப்.ஐ.ஐ. முதலீடு அதிகமாக வரும்போது உங்கள் பங்குகளின் விலை ஏறும். அந்தச் சூழ்நிலையில் ரூபாய் மதிப்பு கூடும். அப்போது டாலரை ஃப்யூச்சரில் குறைந்த விலையில் வாங்கி வைக்கலாம். எஃப்.ஐ.ஐ. முதலீடு வெளியேறும்போது டாலரின் விலை கூடும். அப்போது டாலரை ஃப்யூச்சரில் விற்று சம்பாதிக்கலாம்.

''அட, நான் பங்குச் சந்தையில் கூட முதலீடு செய்யறதில்லீங்க. இனிமே பண்ணலாமானு யோசிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கெதுக்கு சார் இது!'' என்கிறீர்களா? உங்களுக்கும் ஏற்ற சந்தை இதுதான்! ஏனென்றால் டாலர்/ரூபாய் மதிப்பு கண்டபடி ஏறியிறங்குவதில்லை (less volatile). மேலும், கரன்சி ஃப்யூச்சரில் வியாபாரம் செய்ய குறைந்தபட்சம் தேவைப்படும் தொகை 1,000 டாலர் மட்டுமே! அதாவது 48,130 ரூபாய். இதற்கான அதிகபட்ச மார்ஜின் தொகை 4,813 ரூபாய்தான். அதுவே பங்குச் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வியாபாரம் செய்யவேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும்! இன்னொரு விஷயம் பங்குச் சந்தை போல டாலரோ, ரூபாயோ ஏறி இறங்குவது கிடையாது. 

இப்போது சொல்லுங்கள் டாலர்/ரூபாய் ஃப்யூச்சர்ஸ் சந்தையில் வியாபாரம் செய்வது லாபமும் சுலபமானதும் அல்லவா?

சூப்பர் பிக்-அப்..!


கரன்சி டெரிவேட்டிவ்ஸ் வியாபாரம் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் 2008-லும், எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் அக்டோபர் 2008-லும் தொடங்கி நடந்து வருகிறது. தொடங்கிய தேதியிலிருந்து இன்றுவரை கணக்கிட்டால் தினசரி ரூபாய் 4,250 கோடி ஆவரேஜ் வியாபாரம் நடந்து வருகிறது. குறிப்பாகச் சொன்னால் தொடங்கியதில் இருந்து 231 நாட்கள் டிரேடிங் நடந்துள்ளது. இந்த 231 நாட்களில் டாலரின் ரூபாய்க்கு எதிரான மதிப்பு ஸ்பாட் மார்க்கெட்டில் குறைந்தபட்சம் ரூபாய் 43.79 ஆகவும் அதிகபட்சம் ரூபாய் 52.09 ஆகவும் இருந்திருக்கிறது. 

எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ்!

கரன்சி டெரிவேட்டிவ்ஸ் என்றவுடன் ஏற்றுமதியாளர்கள் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங்கில் கடுமையான நஷ்டத்தை அடைந்தார்கள் என சென்ற வருடம் பேப்பரில் படித்தது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அதனால் ரிஸ்க் இதில் அதிகமாக இருக்குமோ எனச் சந்தேகம் வருவது இயல்பே. 

அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த வியாபாரத்தில் பெரும்பான்மையான கான்ட்ராக்ட்கள் ஸ்வாப்ஸ் மற்றும் எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ் வெரைட்டியைச் சேர்ந்தது. எக்ஸாட்டிக் ஆப்ஷன்ஸ் என்பது ஒரு கைதேர்ந்த ரிஸ்க் எடுக்கக் தயாரான டிரேடருக்கான விஷயம். எக்ஸாட்டிக் டெரிவேட்டிவ்ஸ் பலவிதம். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்... சுலபமாகப் புரிவதற்காக டாலர்/ரூபாய் கான்ட்ராக்ட்கள் உதாரணமாக்கப்பட்டுள்ளது. டாலர்/ரூபாயில் எக்ஸாடிக் கான்ட்ராக்ட்கள் நடைமுறையில் இல்லை. மற்றும் சட்டப்படி கூடாது. தனிநபர்களாக இந்த கான்ட்ராக்ட்களில் வியாபாரம் செய்வது கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் விழுவதற்குச் சமம். ஆனாலும் இவை ரிஸ்க் டிரேடருக்கான ஒரு சுவையான விஷயம்!

இந்த இதழில் காரிடார் கான்ட்ராக்ட்கள்: உதாரணத்துக்கு இந்த கான்ட்ராக்டை 3,000 ரூபாய் கொடுத்து வாங்குபவருக்கு வாங்கும் தேதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 50-ஐத் தொட்டால் 10,000 ரூபாயும் 38- ஐத் தொட்டால் 5,000 ரூபாயும் விற்பவர் கொடுப்பார். இவை இரண்டும் நடக்காவிட்டால் அந்த கான்ட்ராக்ட்டினை வாங்கக் கொடுத்த தொகை அம்பேல்!

எச்சரிக்கை!

இந்தத் தொடரில் கரன்சி வியாபாரம் எனச் சொல்லப்படுவது அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் அங்கீகாரத்துடன் எம்ஸிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக் மென்ட்டில் நடைபெறும் டாலர்/ரூபாய் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்டையே குறிப்பிடுகிறது. 

ஃபெமா சட்டத்தின்படி கரன்சி ஸ்பாட் மார்க் கெட்டில் அனுமதி பெற்ற ஏற்றுமதி/இறக்குமதிக்கு சம்பந்தமில்லாத இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்தியர் வியாபாரம் செய்யக்கூடாது. எனவே, ஸ்பாட் மார்க்கெட்டில் யாராவது உங்களுக்கு வியாபாரம் செய்து சம்பாதித்துத் தருகிறேன் என்று சொன்னால் நம்பி ஏமாந்துவிடவேண்டாம். இப்படிச் செய்வது சட்டப் படி தடைசெய்யப்பட்டிருப்பதால் உங்களுக்குப் பண நஷ்டம் ஏற்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கைக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்! அதேபோல மேலே குறிப்பிட்டுள்ள பங்குச் சந்தைகளில் வியாபாரம் செய்யும்போதும் அந்த பங்குச் சந்தையின் டிரேடிங் மெம்பர்களிடம் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். 'வேறு இடத்தில் வியாபாரம் செய்து தருகிறேன்' என்று யாராவது சொன்னால் அது தவறு. அந்த மாதிரி வியாபாரத்தில் பணம் போட்டு ஏமாந்து நிற்க வேண்டாம்!




எம் தளத்தில் இணைந்தமைக்கு நன்றி 

கரன்சியிலும் கலக்கலாம் - 1

அடிக்கடி நமது காதுகளைக் கடந்துபோகிற ஒரு வார்த்தைதான் அந்நியச் செலாவணி. இதற்கு மேல் நாம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளப் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இனி அப்படி இருக்கமுடியாது. அதுவும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களாக இருந்துகொண்டு கரன்சி, ஃபாரின் கரன்சி, ஃபாரெக்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்நியச் செலாவணி குறித்து அறிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி! 

'லோக்கல் செலாவணிக்கே வழியில்லை... பிறகு எங்க சார் அந்நியச் செலாவணியை மோசடி பண்றது...' என ஒரு சினிமாவில் காமெடி டயலாக் வரும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் லோக்கல் செலாவணிக்கு வழிசெய்யவேண்டும் என்றாலே, கொஞ்சமாவது அந்நியச் செலாவணி பற்றித் தெரிந்திருக்கவேண்டும். போதாக்குறைக்கு 'கரன்சி டெரிவேட்டிவ்ஸ் (ஃப்யூச்சர்ஸ்) டிரேடிங்' இந்தியாவில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட, இப்போது ஜம்மென்று வியாபாரம் நடந்து வருகிறது!யார் யார் இந்த வியாபாரத்தைச் செய்வார்கள்? யாருக்கு இந்த வியாபாரம் அவசியம் என்றால் ஒரே விடை அனைவருக்கும் என்பதுதான்! நீங்கள் வண்டியில் நிரப்பும் பெட்ரோலின் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் எப்போதும் 45 டாலருக்கு விற்கிறது என வைத்துக்கொண்டால், ஒரு டாலரின் மதிப்பு 50 ரூபாயாக இருக்கும்போது பெட்ரோலின் விலை அதிகமாகவும், 35 ரூபாயாக இருக்கும்போது விலை குறைவாகவும் இருக்கும் என்பதைச் சுலபமாகப் புரிந்துகொள்வீர்கள். அதுமாதிரி நீங்கள் வாங்கும் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் என எண்ணற்ற தினசரி பயன்பாட்டு விஷயங்களின் விலை டாலரின் மதிப்பைச் சார்ந்தே இருக்கிறது. இந்த விஷயங்களில் தனிநபராகிய நீங்கள் இறக்குமதியாளராக அந்நியச் செலாவணியின் மதிப்பு மாற்றத்தின் பாதிப்பை உணருகிறீர்கள். ஒரு ஏற்றுமதியாளர் எப்படி இந்த விலை மாற்றங்களால் பாதிக்கப்படுவார் எனப் பார்ப்போம். ஒரு பனியன் ஏற்றுமதியாளர் ஒரு டீ-ஷர்ட்டை 40 ரூபாய் அடக்கவிலையில் தயாரித்து 50 ரூபாய்க்கு விற்று 10 ரூபாய் லாபம் பெற நினைக்கிறார். ஒரு ஃபாரின் கம்பெனி அவரிடம் விலை பேசி ஒரு வருடத்துக்கான சப்ளை செய்யும் கான்ட்ராக்டைப் போடுகிறது. அந்த கான்ட்ராக்ட்டில் கையெழுத்திடும்போது டாலரின் மதிப்பு 50 ரூபாய் என இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1,000 டீ-ஷர்ட்களை சப்ளை செய்யவேண்டும், சரக்குக் கையில் கிடைத்ததும் பணம் என்பது கண்டிஷன்! சப்ளை ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் டாலரின் மதிப்பு 35 ரூபாய் என ஆகிவிட்டால் என்னவாகும்? உற்பத்தி விலையான 40 ரூபாய்க்கும் குறைவாக 35 ரூபாய்க்கு சரக்கை விற்றதால், ஒரு டீ-ஷர்ட்டுக்கு 5 ரூபாய் நஷ்டம்! இந்த நஷ்டத்தை அவர் எப்படிச் சரிசெய்யலாம்? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது! இதுபோன்ற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக வந்திருப்பதுதான் 'கரன்சி டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங்.' இனி வரும் இதழ்களில் அது குறித்து ஏ டூ இசட் பார்க்கப் போகிறோம்.

Saturday, December 4, 2010

Jeevan Saral

Jeevan Saral is a versatile insurance plan from Life Insurance Corporation of India with features of conventional plans and flexibility of unit linked plans.

It provides:

  • Higher insurance cover
  • Smooth returns
  • Flexibility and liquidity
You are provided the freedom to choose the premium you want to pay. Once premium is chosen Insurance coverage and the maturity benefit is derived from it.


Salient Features

  1. Maturity benefits : Maturity Sum Assured (MSA) + Loyalty additions
  2. Death benefit: 250 times of the basic monthly premium + Return of premium paid (excluding 1st year premium) + Loyalty additions.
  3. Loyalty addition: will be declared after the policy has been in full force for at least 10 years.
  4. Auto cover: If the policy is in force for more than three years, the risk coverage will continue for another 12 months even if the premiums are not paid in that period.
  5. Surrender charge: No surrender charge will be deducted from policies surrendered after 5 years.
  6. Partial surrender: is available after 3 years and provides a smooth return on your needs.